March 1, 2008

படித்ததில் பிடித்தவை ...

***ரோஜாப் பூக்களை
பயிராக்குகிறேன்.....
நானொரு காதல் தோட்டக்காரன்
விழி அம்புகளைக் கொண்டு
உன்மேல் எய்கிறேன்
நானொரு காதல் வேட்டைக்காரன்
வீட்டில் சோறுஇருந்தும்
விரதம்இருக்கிறேன்....
நானொரு காதல் பக்தன்
உனது வாழ்க்கைக்கு
தலைமை தாங்குகிறேன்
நானொரு காதல் தலைவன்
உனது இதய சிம்மாசனத்தில்
வீற்றிருக்கிறேன்
நானொரு காதல் மன்னன்.....

***தேய்வதும் வளர்வதும்
நிலவுக்குஅழகு என்றால்...
உதிர்வதும்மலர்வதும்
பூக்களுக்குஅழகு என்றால்...
கரையைத்தொடுவதும்பிரிவதும்
அலைகளுக்குஅழகு என்றால்...
தோழனே!தோல்வியும்வெற்றியும்
உன் வாழ்க்கைக்குஅழகு தான்!

***என் புல்லாங்குழலில்
புகுந்து வந்த காற்றில்
உன் பெயர் கேட்கலாம்!
என் பேனாவிலிருந்து
வழிந்த மைத்துளிகளில்
உன் அழகு பார்க்கலாம்!
*உன் செம்பாதச் சுவடுகளை
பின் தொடர்ந்தால்
சொர்க்கம் போகலாம்...
நீ தந்த சுகங்களை
அச்சுக் கோர்த்தால்
'சுக நானூறு' படிக்கலாம்
பெண்ணே!நீ
என் நெஞ்சுக்குள்தஞ்சம்
புகுந்த வானவில்!
நீயின்றி வாழ்க்கை
எனக்குகானல்நீர்!.....

***பத்து மாதங்களுக்கு முன்
ஒரு நாள் எட்டிப் பார்த்தது
வரவா என்றதுதடுத்தேன்
பயனில்லை!
உருக்கொண்ட பின்புதான்உணர்ந்தேன்
காதல் குழந்தை நெஞ்சில் குடிவந்ததை!
பரவசப்படுத்தியதுவானில் மிதந்தேன்
பைத்தியமாக்கியதுமனதை
இழந்தேன்
ஆனாலும்அழித்து விட்டேன்
வெளிவருமுன்பு!
இன்று மீண்டும் துளிர்க்கிறது
என் செய்வேன்
நேசத்துக்கு அடிமையான மனதை!!

***உன் ஸ்பரிசத்தை உணர
'மழை' ஆன போது
குடைக்குள் சென்று ஒளிந்தாய்!
'அலை' ஆனபோதோ
ஒதுங்கிச் சென்றாய்!
இன்று நான் 'சிலை'ஆன பிறகு
என் ஸ்பரிசத்தை தேடுகிறாய்
நானோ மெஸ்மரிசமாய்!

***நானுனைத் தேடும் வேளைகளில்
நீயோ
நீயெனைத் தேடும் வேளைகளில்
நானோ
ஒருபோதும் ஒருவருக்கொருவர்
சந்தித்ததேயில்லை!
நட்ச்சத்திரக் கூட்டங்களிலிருந்து
ஒரு நட்சத்திரம்நிலாவைப் பார்ப்பதுபோல்
நீயும் நானும்நானும் நீயும்!
என்றாவதுசந்திக்கும்
அந்த எண்ணிலடங்காசந்தோஷ நொடிகளில்
காதலைநம் காதலிடம் சொல்வதைத் தவிர
சகலமும் பேச
உறக்கம் வராத இரவுகளில்
விளங்கமுடியா சொப்பனங்கள்!
ஒற்றை தரிசனத்தில்
உலகின் அத்தனை புத்தகங்களையும்
படித்துவிட ஞானியாகிறேன்!
உனைத்தேடும் என்மனத்தவத்தில்
என்னையே மறக்கும் நிலையடைய
உன்னில் உறுதியாய்நிலைத்து மகிழ்கிறது
எந்தன் காதல்
உன் மனதில்
நானேயென்றதெளிவான நம்பிக்கையில்!

***ஊசி முனை கொண்டு
இதயத்தைக் குத்துவதைக் காட்டிலும்
பலத்த வலி என்பது இது....!
செருப்பால்அறைவதைக் காட்டிலும்
கொடுந் தண்டனை என்பது இது....!
பேசாமல்வதைக்கும் மவுனத்தைக் காட்டிலும்
பேசிக் கொல்வது என்பது இது...!-
ஆழத்திலும் ஆழமானஎன் நேசத்தையும்
மாற்றிக் கொள்ள இயலாதஎன் மனதையும்
அறிந்த பிறகும் கூட
மறுபடி மறுபடி என்னை
அண்ணா என்றே அழைக்கும்
ஆசைத் தோழியின்அந்த ஒரு வார்த்தை....!
***கல்லைசேதப்படுத்திய
உளியால்
சிற்பம் பிறந்தது!
என் நெஞ்சைசேதப்படுத்திய
உன் விழியால்காதல் பிறந்தது!

***திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!
சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!
பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது-
அன்பேஉன்னை நீங்கும் போது
எனக்குஉலகமே இருண்டு போகிறது...!

***அன்னை சுமை என்று
அனாதை இல்லத்தில்தள்ளிவிட்டவனே
உன்னைச் சுமையென்று
தாய் ஒரு நிமிடம்நினைத்திருந்தால்
உதிரத் துளிகளாய்
சிதறிப் போயிருப்பாய்
குறைப் பிரசவமாய்
குலைந்து போயிருப்பாய்.

***தடுக்கி விழச் செய்தாலும்
மேடு பள்ளங்களும்வளைவு நெளிவுகளும்
எப்போதுமேஆபத்தானவைதான்...
பாதையிலும் சரி...
பாவையிலும் சரி...!